Friday, July 7, 2017

மாமல்லபுரத்தின் சிறப்பு

Image result for மாமல்லபுரம்                             இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 7ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் சிக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாவலிபுரம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அமைக்கப்பட்ட கட்டடங்கள் திராவிடக் கட்டடக்கலை மரபில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்களைக் கொண்டு கோயில்கள் அமைக்கும் மரபு இக்காலத்தில் இருந்nது தோன்றியது. எனலாம்.

                       மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கபடைவரைக் கோயில்கள், அல்லது மண்டபற்கள் ஓர்ணக்கல் கோயில்கள், இவை தவிர புடைப்புச் சிறந்த தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்பட்டன. https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம் மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக தனிமையாகவும் இயல்பானவையாகவும் இருப்பதனாலும் குடர்க்கைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிறப் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும் மாமல்லபுர நினைவுச் சின்னங்களை உலகில் பண்பாட்டுச் சின்னம் என்று 1984 யுனெஸ்கோ அறிவித்தது.Image result for மாமல்லபுரம் கடற்கரை கோவில்
                      அருச்சுனன் தபசு எனும் அழைக்கப்படும். புடைப்புச் சிற்பத் தொகுதி மிகவும் புகழ்பெற்றது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள், மற்றும் இயற்கை அம்சங்கள் எனப்பல7 வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச்சிற்பம் ஏதோ ஒரு புராணக்கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதாவது மகாபாரத புரத்திற்கு தயார் ஆகும். அருச்சுனன் சிவனை நோக்கி தவம் இருக்கும் காட்சி எனவும், பகீரதன் கங்கைகைய பு{மினக்கு அழைத்துவர தவம் இருக்கும் காட்சி எனவும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
சுமார் 30அ வரை உயரமும்  அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட இப்பாதை இயற்கையிலேயே நடுவில் பிளவுபட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக் கொள்ளாது இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாக சிற்பி கையாண்டுள்ளான். இது ஒரு ஆறு அல்லது நீnருhட்டமாலக உருவாக்கப்பட்டுள்ளது. நிலைக்குத்துத் திசையில் சிறப்புத்தாகுதி நான்கு படையகள் அல்லது நிலைகளாக கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் இருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும் இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகையும் அடியில் உள்ளது. பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாக கூறப்படுகின்றது.
                       
Image result for மாமல்லபுரம்                        மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்ட கோயில்களில் இரவுக் கோயில்கள் முதன்மை பெறுகின்றன. இவை நிலத்திலிருந்து துருத்திக் கொண்pடிருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப்பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும். இவற்றை பஞ்சபாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மை பாத்திரங்களான தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியொரின் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. https://ta.wikipedia.org/.../மாமல்லபுரம்_இரதக்_க..பஞ்சபாண்டவர்களின் பெயர்களை இட்டு அழைக்கப்பட்டாலும் இவை அவைகளுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல இரதக்கோயில்கள் ஒவ்வொன்றம் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை. அத்துடன் இவை திராவிட கட்டிடக்கலையின் வௌ;வேறு வகைகளைக் காட்டுவனவாக உள்ளன.
1. தர்ம இரதம் (சிவன்கோயில்)
                       இவற்றுள் பெரியது சிவனுக்குரிய கோயிலாகும். இக்கோயில் என அழைக்கப்படும் நிலத்தளத்துடன் சேர்ந்து இக்கோயில் மூன்று தளங்கள் கொண்டது. தளங்களில் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. இதன்மேல் தளங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல்தளங்களுக்கும் செல்வதற்கு முறையான படிக்கட்டக்கள் அமைக்கப்படவில்லை.
2. வீம இரதம் (திருமாள் கோயில்)
                   வீமரதம் எனப்படுவது திருமாலுக்காக அமைக்கப்பட்டு கொண்டுள்ளது. இத்தாள அமைப்பு இதன் மேற் காணப்படும் நீண்ட சாலை விமான அமைப்புக்குப் பொருத்தமாக உளள்து. இவ்விடத்தில் காணபப்டும் தர்மரா இரதம், அருச்சுனன் இரதம் போல் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை.

3. அருச்சுனன் இரதம் (முருகன் கோயில்)

                       இவ் இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது. என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது. எனக் கருதப்பட்டாலும் இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர்.

4. திரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்)

                        இவ்இரதம் சிறு குகை ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும். இக் கோயில் கொற்றவைக்குரியது ஆகும்.

5. நகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்)

                        இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாக கருதப்படுகின்றது. இது சிற்ப நூலில் கஜ விருட்ஷம் (யானையின் பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்காளை விமானம் என்பர். இக்கோயில் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.https://www.youtube.com/watch?v=vrlvAm2O2kE
                        எனவே மாமல்லபுர கடற்கரை சிற்பங்கள் இடை பாடுபவையாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவத்தைக் கொண்டு இன்றுவரை தமிழரின் புகழை உலகிற்கு வெளிக் கொண்டுவரும் சக்திகளில் இதுவும் ஒன்று என்பது சிறப்பான அம்சமாகும். இங்கு அமைந்த குடை வகைகள் இயற்கையுடன் நேரடி தொடர்பு கொண்டவையாக உள்ளது என்பது சிறப்பாகும்.


No comments:

Post a Comment

உலக மரபுரிமைகளில் ஒன்ற தஞ்சைப் பிரகதீசுவரர்

                            தஞ்சாவூரில் உள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமய கோயிலும் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்து...