இலங்கையின் புராத தலைநகரமான அனுராதபுர நகரத்தில் ஸ்ரீமகாபோதி, ருவன்வெலிசாய, லோவமகாபாய, அபயகிரிய, ஜேத்தவனராம, குட்டம் பொய்கை , யானைப்பொய்கை, அசுறுமுனிவர் எனும் பல்nவுறு பாதன கட்டடங்கள் காணப்படுகின்றன. ரன்மசு உயன முதலிய பூங்காக்களையும் காணக்கூடியதாக உள்ளது. இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் கருத்திற் கொண்டு 1982ஆம் ஆண்டு அனுராதபுரம் உலக மரபுரிமைப் பட்டப்பியலில் சேர்க்க்பட்டது.
அனுராதபுரம் பண்டுகாபய மன்னனால் தலைநகரம் ஆக்கப்பட்டு 1300 ஆண்டுகள் தலைநகராக இருந்த மையமாக இது காணப்படுகின்றது. அத்துடன் ஆரம்ப காலத்தில் இந்து சமயம் சார்ந்த எச்சங்களும் பிற்பட்ட காலத்தில் பௌத்த சமயத்தின் முக்கிய இடமாகவும் விளங்கிய இவ்மையம் என்ற காரணத்தினால் ஐனாவினால் உலக கலாச்சார மையங்களில் நன்றாக விளங்குகின்றது.
அனுராதபுரத்தினுள் எமது புராதன கலாசார நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. அதாவது எமது முன்னோர்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், சிற்பங்கள், களங்கள், அணைகள் ஆகியவற்றின் எச்சங்கள் தேசிய சொத்துக்களாகக் கருதிப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த தேசிய சொத்துக்கள் நாட்டின் தேசிய மரபுரிமையாகவும் கருதப்படுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் கலாச்சார பண்பாட்டை அறிவதை நோக்கமாகக் கொண்டு இவ் மையத்திற்கு அதிகளவானோர் செல்லும் ஓர் இடமாக காணப்படுகின்றது..https://ta.wikipedia.org/.../பஞ்ச_பாண்டியர்_(அநு...
இந்த நகரைச் சுற்றி 5, பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மிகப்பழைய காலம் முதலே இருந்து வருகின்றன. அனுராதபுரத்திலே வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத்தேவைகளுக்காக, சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இக்குளங்கள் பயன்பட்டன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு பின்னரும் இக்குளங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக அதனைச் சுற்றிப் பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன.
கைவிடப்பட்ட பின்னர் பாழடைந்து காடமர்ந்து, மறக்கப்பட்டுக் கிடந்த இப்பண்டைய நகரின் அழிபாடுகள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், வழிபாட்டிடங்கள், வைத்தியசாலைகள், பௌத்தபிக்குகளின் வசிப்பிடங்கள், வைத்தியசாலைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்கார தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், சகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.https://www.youtube.com/watch?v=7K27rFdSGl8
எனவே தொகுத்து நோக்கும்போது அனுராதபுரம் என்று சுற்றுலா துறையில் முக்கியமான மையமாக திகழ்கின்றமை. குறிப்பிடத்தக்க அம்சமாகும். இத்தகைய பெருமைகளாக கொண்ட இவ்மையத்தை பேணி பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத தேவையாக உள்ளது. எனலாம்.
S.Shawmighah
University of jaffna
No comments:
Post a Comment