Friday, July 7, 2017

நானாதீவின் புகழ் அன்று தொட்டு இன்றுவரை

                            நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினாதீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி தபீடங்களில் தேவியின் இருப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகின்றது. ஒலு சிலர் உண்மையான சக்தி பீடக்கோவில் போர்ச்சுக்கீசர் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. என்று கூறப்படுகின்றது. Image result for நயினாதீவு நாகபூசணி
                   
                                    இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல்,  இரவு நேர அன்னதானம் கொடுக்கப்படும். அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வருவோர் தங்கிச் செல்வோரே அதிகமானோர் இதனால் தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி சிங்களவர்களும் இங்கு வந்து செல்வர். https://ta.wikipedia.org/.../நயினாதீவு_நாகபூச...
Image result for நயினாதீவு நாகபூசணி                               நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புபெறற் தீவாக காணப்படுகின்றது. திராவிட இனமாகிய தமிழர்களின் முன்னோர்களாக, நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்படுவது நாவழிபாடு ஈழத்தமிழர்களிடையேயும், ஆதியில் இருந்தே நாக வழிபாடு காணப்பட்டது என்பதற்கு அதன் எச்சங்களாக காணப்படும் வழிபாட்டு முறைகளும் ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும் இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும். நாகவழிபாட்டு முறையும் இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாhடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் உருமாற்றம் பெற்றன.https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு 

ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கொயிலாக மாற்றம் பெற்ற தலமே நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் கலயமாகும். இக்கோவிலின் கருவறையில் உள்ள சீறும் ஐந்து தலை நாகச்சிலை, எண்ணாயிரம் ஆண்டுகள் வரை பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இக்கோயில் பல்வேறு தொடர்புகளைக் கொண்டுள்ளது. வரலாற்று குறிப்புக்கள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் செய்திகள், புராண வரலாறுகள் என பல்வேறு தொடர்புகளையும் கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத்தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்துள்ளது. https://www.youtube.com/watch?v=y6HUBt2ZkXU

                 Image result for நயினாதீவு நாகபூசணி நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள்வீதியில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கப்பல் திருவிழாவும், மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. நவராத்திரி, ஏகதாரகௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்றன மிகச்சிறப்பாக செய்யப்படுகின்றது. இராகு, கேது பிரச்சினை, சாபம், தோவும் போன்றன இக்கோயிலுக்கு சென்றவுடனேயே நீங்கிவிடும் என்பது மக்களுடைய நம்பிக்கையாகவுள்ளது. https://www.youtube.com/watch?v=XRIBK3fX9R8

                 எனவே தொகுத்து நோக்கும்போது தமிழர்களின் வரலாறு எகிப்துடன் தொடர்புபடுத்தி பார்க்கம் இன்றைய காலகட்டத்தில் நாகவழிபாட்டின் மூலம் சிறப்பு பெறுவதுடன் தமிழரின் வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயம் என்றவகையிலும் முன்னைய காலத்தில் இருந்து இன்றுவரை புகழ்பெற்றிருக்கம் சப்ததீவுகளில் ஒன்றாகவும் இவ்வாலயம் விளங்குவது சிறப்பிற்குரிய ஒன்றாகும். 


உசாத்துணைகள்


S.Shawmighah
University of jaffna

No comments:

Post a Comment

உலக மரபுரிமைகளில் ஒன்ற தஞ்சைப் பிரகதீசுவரர்

                            தஞ்சாவூரில் உள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமய கோயிலும் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்து...